விழுப்புரம் பவ்டா தொண்டு நிறுவனத்தில் மகாகவி பாரதியாரின் நினைவு தினம் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
விழுப்புரம் பவ்டா தொண்டு நிறுவனத்தில் பவ்டா கலை, அறிவியல் கல்லூரி, பவ்டா வானொலி சார்பில், மகாகவி பாரதியாரின் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது. எழுத்தாளர் நாஞ்சில் கி.ராஜேந்திரன் வரவேற்றார்.
பவ்டா தொண்டு நிறுவன மேலாண்மை இயக்குநர் செ.ஜாஸ்லின் தம்பி, பாரதியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து, பவ்டா தொண்டு நிறுவன முதுநிலை பொது மேலாளர்கள் வெங்கடாஜலபதி, பாரி, ஆல்வின்சகாயம், கோவிந்தராஜ், அரிசந்திரன், ராஜதுரை, ஆனந்தவேலன், சாந்தி, வளர்மதி, அசோகன் மற்றும் ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு, பாரதியாரின் உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.