லாரி திருட்டு

கள்ளக்குறிச்சியில் லாரி திருடுபோனது. 

கள்ளக்குறிச்சியில் லாரி திருடுபோனது. 
 கள்ளக்குறிச்சி விநாயகா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருளாளன் (30). இவர் கடந்த 28.7.18 அன்று மதியம் லாரியை தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தாராம். 30.7.18 அன்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த லாரியை காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். 
 இது குறித்து அவர்  திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com