கோலியனூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் அருகே உள்ள கோலியனூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கிராமப்புற கர்ப்பிணிகளுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.  கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், விழுப்புரம் நகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று,  வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகள் உடல் நலத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
இதையடுத்து விழாவில் கலந்துகொண்ட 120 கர்ப்பிணிகளுக்கு நலங்கு வைத்தும்,  வளையல் அணிவித்தும் வளைகாப்பு விழா நடைபெற்றது. நிறைவாக, அவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கி விருந்து வைத்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் சந்தானவதி,  கீதா உள்ளிட்டோர் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com