பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்...

விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
இது குறித்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:  விழுப்புரம் மாவட்டத்தில்,  தீபாவளிப் பண்டிகையையொட்டி 
தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 2008-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.  விருப்பமுடையோர்,  உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை வருகிற 28.09.2018-ஆம் தேதிக்கு முன்னதாக,  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 
 தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் படிவம் 5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பம் 4 பிரதிகள், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரை
படங்கள் 4 பிரதிகள்,  கடை வைக்கப்படும் இடத்தின் ஆவணப் பத்திரம் நகல் 4 பிரதிகள்,  உரிமக் கட்டணம் ரூ.500-ஐ உரிய அரசு கணக்கில் செலுத்தி,  அதற்கான அசல் செலுத்து சீட்டு ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com