விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடைகள் அமைப்பதற்கான உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில், தீபாவளிப் பண்டிகையையொட்டி
தற்காலிக பட்டாசு கடைகள் அமைப்பதற்கு 2008-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்ட விதிகளின் கீழ் மாவட்ட வருவாய் அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுடையோர், உரிமம் பெற உரிய ஆவணங்களுடன் தங்களது விண்ணப்பங்களை வருகிற 28.09.2018-ஆம் தேதிக்கு முன்னதாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தற்காலிக உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் படிவம் 5-ல் பூர்த்தி செய்த விண்ணப்பம் 4 பிரதிகள், தற்காலிக பட்டாசு உரிமம் கோரும் இடத்தின் அசல் வரை
படங்கள் 4 பிரதிகள், கடை வைக்கப்படும் இடத்தின் ஆவணப் பத்திரம் நகல் 4 பிரதிகள், உரிமக் கட்டணம் ரூ.500-ஐ உரிய அரசு கணக்கில் செலுத்தி, அதற்கான அசல் செலுத்து சீட்டு ஆகியவற்றை இணைத்து விண்ணப்பிக்கலாம்.