உளுந்தூர்பேட்டையில் தேன்மொழி நினைவு அறக்கட்டளை சார்பில், மகளிருக்கான சுய பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில், ஆண்களால் ஏற்படும் பாலியல் இடர்பாடுகளிலிருந்த மகளிர் தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமுக்கு அறக்கட்டளைச் செயலர் துர்கா தலைமை வகித்து, சிறப்புரையாற்றினார்.
இதில், அறக்கட்டளைத் தலைவர் தேன்மொழி, சமூக சேவகர் எஸ்.பாண்டியன் உள்பட அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து
கொண்டனர்.