அனுமதியின்றி பதாகைகள் வைத்ததாக வழக்குப் பதிவு

ஆரோவில் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதின்றி பதாகைகள் வைத்ததாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு


ஆரோவில் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதின்றி பதாகைகள் வைத்ததாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியில் நடைபெறும் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தரும் நடிகர் விஜயை வரவேற்கும் வகையில், விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகேயுள்ள நாவற்
குளம் கூட்டுச் சாலை பகுதியில் ஏராளமான பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
அரசு அனுமதியின்றியும், போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக, பட்டானூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜா ஆரோவில் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, புதுவை நடிகர் விஜய்
மக்கள் இயக்க மாநிலச் செயலாளர் சரவணன் மீது ஆரோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com