சங்கராபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 199 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
குறிப்பிட்ட சமூகதத்தினரை அவதூறாகப் பேசி, அடையாளம் தெரியாத நபர் சமூக வலைதளத்தில் விடியோ ஒன்றை பதிவிட்டது தொடர்பாக, இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, சங்கராபுரத்தில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஒரு தரப்பினர் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாக, கிராம நிர்வாக அலுவலர் வரதராஜன் சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில், போலீஸார் சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜானகிராமன் உள்பட 199 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.