கோடைகால இறகுபந்து பயிற்சி: நாளை தொடக்கம்

விழுப்புரத்தில் மாணவர்களுக்கான கோடை கால இறகுபந்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை (ஏப்ரல் 15) முதல் தொடங்குகிறது.


விழுப்புரத்தில் மாணவர்களுக்கான கோடை கால இறகுபந்து பயிற்சி முகாம் திங்கள்கிழமை (ஏப்ரல் 15) முதல் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட இறகுபந்து கழகச் செயலர் ரா.சதாசிவம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட இறகுபந்து கழகம் சார்பில், கோடை கால இறகுபந்தாட்டப் பயிற்சி முகாம் விழுப்புரம் - மாம்பழப்பட்டு சாலையில் பெதர்ஸ் கிளப் மையத்தில் ஏப்ரல் 15 முதல் மே 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினசரி காலை 10 மணிக்குத் தொடங்கி, நண்பகல் 12.30 மணி வரையும், பிறகு மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையும் என இரண்டு பிரிவுகளாக பயிற்சி நடைபெறுகிறது. இந்தப் பயிற்சியில் 8 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொள்ளலாம்.
பயிற்சி முகாமின் இறுதியில், போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசளிக்கப்படும். இதில், தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர். பயிற்சியில் பங்குபெறும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு 97877 39111என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com