விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து, உளுந்தூர்பேட்டை நகரில் பாஜகவினர் திங்கள்கிழமை மாலை வாக்கு சேகரித்தனர் .
மாவட்ட பொதுச் செயலர் வி.கண்ணன், மாவட்ட நெசவாளர் பிரிவு இராம.பழனிவேல், மாநில வழக்குரைஞர் பிரிவு சௌ.பக்கிரிசாமி, நகரப் பொதுச்செயலாளர் எஸ்.இரத்தினசாமி, மகளிர் அணி டி.முத்துலட்சுமி உள்ளிட்ட பாஜகவினர் வீடு, வீடாகச் சென்று மத்திய அரசு நிறைவேற்றிய திட்டங்கள், பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தனர்.