செஞ்சி வட்டம், செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை அம்மன் கோயிலில் ஆடிப் பூர விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு, காலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் லலிதா செல்வாம்பிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, 18 ஆயிரம் வளையல்களை கொண்டும், பல்வேறு மலர்களைக் கொண்டும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாரதனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு சகஸ்கர நாம அர்ச்சனை, மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, ஸ்ரீசக்ர தீபாராதனை, புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றன. இரவு 9.30 மணிக்கு அம்மனுக்கு மகா ஜோதி தரிசனம் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் கன்னியப்பன் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.