தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் சங்க மாநில செயற்குழுக் கூட்டம்

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் செஞ்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலர் டி.தேவிசெல்வம், மாநிலப் பொருளாளர் வி.பெரியதுரை, மாநிலத் துணைத் தலைவர் பி.வெங்கடேசன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டலச் செயலர் எம்.கே.சி.
அகஸ்டின்ராஜா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக செஞ்சி ஊரட்சி முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவரும், செஞ்சி நகரக் கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.ரங்கநாதன் வாழ்த்துரையாற்றினார். மதுரை சோலை ராஜா, சமீபத்தில் இறந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ஏழுமலை குடும்பத்துக்கு சங்கத்தின் சார்பில், 
ரூ. ஒரு லட்சம் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட மகளிரணிச் செயலர் ஆர்.செந்தமிழ்ச்செல்வி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் வி.டேவிட் மாணிக்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த விழுப்புரம் மாவட்டச் செயலர் செஞ்சி ஏ.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் 16.6.2019-இல் சங்கத்தின் ஐம்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்திய தருமபுரி மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிப்பது, சங்க மாநிலத் தேர்தலை ஆகஸ்ட் மாத இறுதியில் நடத்துவது, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு நிதி பெறும் மேல்நிலைப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் என்.சி.இ.டி. விதிகளின்படி, பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com