கள்ளக்குறிச்சியை அடுத்த வேங்கைவாடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கடந்த 26-ஆம் தேதி அம்மனுக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை காலை காத்தவராயன், ஆரியமாலா திருக்கல்யாணம், மாலை காத்தவராயன் சின்னாள் மோடி எடுத்தல், இரவு கழுகு மரம் ஏறுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை அக்னி மூட்டி தீமிதி திருவிழாவும், காளிக் கோட்டை இடித்தலும் நடைபெற்றது.
தொடர்ந்து திங்கள்கிழமை (ஆக. 5) காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, நண்பகல் 12 மணிக்கு மாரியம்மனுக்கு சாக்கு ஊற்றுதல், ஒரு மணிக்கு காத்தவராயன் மறுமணம், அம்மன் தாலாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வேங்கைவாடி ஊர் மக்கள் செய்தனர்.