செஞ்சி சிறுகடம்பூரில் அமைந்துள்ள வடக்கு பார்த்த அம்மன் (எ) ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருடபூர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி மற்றும் இளையாத்தம்மன் ஆகிய அம்மன்களுக்கு வருடபூர்த்தி விழாவை முன்னிட்டு, காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், ஸம்வத்ஸரா ஹோமம்.
அபிஷேக -ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு அம்மன் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, பதினாறு வகையான உபச்சாரங்களுடன் கற்பூர ஆரத்தி நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.