மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் சேவார்த்தி மண்டபம் அருகே 65 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார். இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
இதனிடையே, உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை அங்கிருந்தவர்கள் மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த 2-ஆம் தேதி அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண், கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தார்.