பேருந்து நடத்துநர்  வீட்டில் நகை திருட்டு

கிளியனூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

கிளியனூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
திண்டிவனம் அருகேயுள்ள எறையானூர், பாண்டியன் 
நகரைச் சேர்ந்தவர் பொன்னி மகன் ராமலிங்கம் (54), அரசுப் பேருந்தில் நடத்துநராக பணிபுரிகிறார். இவர், திங்கள்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, குடும்பத்தினருடன் அருகேயுள்ள தென்களவாய் கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வம் கோயிலுக்கு சவாமி கும்பிடச் சென்றார்.
நள்ளிரவு வீட்டுக்கு வந்தபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள், ரூ.5ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. 
இது குறித்த புகாரின் பேரில், கிளியனூர் போலீஸார் 
செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். மேலும், திருட்டில் ஈடுபட்ட மர்ம
நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com