மாணவர்களுக்கு நல உதவி

வேல்டு விஷன் இந்தியா அமைப்பின் செஞ்சி வட்டார வளர்ச்சித் திட்டம் மூலம் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

வேல்டு விஷன் இந்தியா அமைப்பின் செஞ்சி வட்டார வளர்ச்சித் திட்டம் மூலம் மாணவர்களுக்கு நல உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு, செஞ்சி ஏடிபி திட்ட அலுவலர் ஜெபசிங் தலைமை வகித்து நல உதவிகளை வழங்கினார் . விழாவில் வேல்டு விஷன் இந்தியா செஞ்சி வட்டார வளர்ச்சித் திட்டம் மூலம் ரூ.3 லட்சம் மதிப்பில்  33 மாணவர்களுக்கு உயர் கல்வி உதவித் தொகை, 200 நலிவுற்ற பள்ளி குழந்தைகளுக்கு புத்தகப்பை, கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.  செல்லத்துரை, மணிவாசகம், அருள்எட்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிராம பணியாளர்கள் செல்வம், டென்னிஸ், சக்திவேல், ஜெயதர், பெனிட்டோ உள்ளிட்டோர் செய்திருந்தனர். விடிவெள்ளி மக்கள் கூட்டமைப்புச் செயலர் மதியழகன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com