விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகளை வைக்கும் குழுவினருக்கான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, காவல் துணைக் கண்காணிப்பாளர் ந.ராமநாதன் தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் சிலைகளை வைப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளர் தங்க.விஜயகுமார், காவல் உதவி ஆய்வாளர் ச.மணிகண்டன் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.