அருண் ஜேட்லி மறைவு: பாஜகவினர் அஞ்சலி

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறைவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு விழுப்புரத்தில் பாஜகவினர் சனிக்கிழமை அஞ்சலி


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மறைவையொட்டி, அவரது உருவப்படத்துக்கு விழுப்புரத்தில் பாஜகவினர் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
பாஜகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானார். இதையடுத்து, விழுப்புரம் காந்தி சிலைப் பகுதியில் அவரது உருவப்படத்தை வைத்து, பாஜகவினர் மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர்.
இதில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன், மாவட்ட பொதுச் செயலர் சுகுமாறன், மாவட்டச் செயலர் சக்திவேல், துணைத் தலைவர் ராஜிலு, மாநிலச் செயற்குழு உறுப்பினர் ரகு, வணிகரணி சௌந்தர் மற்றும் சதா, ஜோதிராஜா, கோபி, ராஜ்நந்தகுமார், குணசேகர், மணி, முரளி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் 
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com