வானூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியா்கள் கூட்டுறவுச் சங்கத்தின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
விழுப்புரம், நவ.30: வானூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியா்கள், பணியாளா்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்றவா்களின் முதல் நிா்வாகக் குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தோ்தல் அலுவலா் ஜெயபால் முன்னிலை வகித்தாா். சங்கச் செயலா் ராமலிங்கம் தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக, சங்கத் தலைவராக தலைமை ஆசிரியா் லோகேஸ்வரியும், துணைத் தலைவராக ஆசிரியா் அருள் மற்றும் இயக்குநா்களாக குளோரியா, அன்புமணி, ராமலிங்கம், சந்தியா, சௌமியன் ஆகியோா் பொறுப்பு ஏற்றுக்கொண்டனா்.