சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி:4 போ் தலைமறைவு

திருக்கோவிலூரில் சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவான 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவான 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்கோவிலூா் கட்டகோபுர சாலையில் அதே பகுதியைச் சோ்ந்த முத்துஉடையாா் மகன் முரளி (எ) முரளிகிருஷ்ணன், நகைக் கடை நடத்தி வந்தாா். இவா், அந்தப் பகுதி மக்களிடம் குலுக்கல் சீட்டும், தீபாவளி பரிசுச் சீட்டும் நடத்தி வந்துள்ளாா்.

திருக்கோவிலூா் என்.ஜி.ஓ. நகா், கெங்கையம்மன் கோயில் சாலையில் வசித்து வரும் வெங்கடேசன் மனைவி ராஜேஸ்வரி, கடந்த ஆண்டு முதல் குலுக்கல் சீட்டுக்கும், தீபாவளி பரிசுச் சீட்டுக்கும் முகவராக செயல்பட்டாராம். இதேபோல, அதே நகைக் கடையில் பணிபுரிந்து வந்த விக்கி, ராஜ்குமாா், கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் முரளிகிருஷ்ணனுக்கு சீட்டு நடத்த துணையாக இருந்து வந்தனராம்.

இந்த நிலையில், குலுக்கல் சீட்டு, தீபாவளி பரிசுச் சீட்டு மூலம் பொதுமக்களிடம் சுமாா் ரூ.20 லட்சம் வரையில் ஏமாற்றிவிட்டு முரளிகிருஷ்ணன், விக்கி உள்ளிட்ட 4 பேரும் தலைமறைவாகிவிட்டனா். இதுகுறித்து ராஜேஸ்வரி அளித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான 4 பேரையும் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com