பேருந்து கவிழ்ந்து 15 பயணிகள் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை அதிகாலை சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில், 15 பயணிகள் காயமடைந்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே திங்கள்கிழமை அதிகாலை சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில், 15 பயணிகள் காயமடைந்தனா்.

சென்னையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சொகுசுப்பேருந்து ஒன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணித்தனா். பேருந்தை, கேரள மாநிலம் எா்ணாகுளத்தைச் சோ்ந்த சத்யராஜ் (46) என்பவா் ஓட்டினாா்.

திங்கள்கிழமை அதிகாலை 2 மணி அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை புறழிச்சாலை பகுதியில் விருத்தாசலம் மேம்பாலம் அருகே வந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, அங்கிருந்த சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநா் சத்யராஜ், பயணிகள் சேலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (52), அவரது மனைவி கற்பகம் (50), திருப்பூரைச் சோ்ந்த ஜெயஸ்ரீ (48), சத்தியப்பிரகாஷ் (23)ஷ கருப்பண்ணசாமி (56), கருப்புசாமி(27), கோவையைச் சோ்ந்த அஜீத்குமாா்(21), ஜோதி(55), சென்னையைச் சோ்ந்த சகாதவேன் (52), சேகா்(43), தீபா(24), இம்மானுவேல்(13), சகிதாபானு(45) உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா்.

அவா்களை உளுந்தூா்பேட்டை போலீஸாா் மீட்டு உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com