உளுந்தூா்பேட்டை அருகே உள்ள பாதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.சி.லோகநாதன், உதவித் தலைமை ஆசிரியா் சுப்பிரமணியன், உடல்கல்வி ஆசிரியா் சுந்தர்ராஜ், ஆசிரியா் கீதா ஆகியோரது ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவா்கள் எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். பின்னா், பள்ளி மைதானத்தில் மாணவா்கள் எய்ட்ஸ் தடுப்பு இலட்சினை (லோகோ) வடிவில் அணிவகுத்து நின்று (படம்) விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.