கள்ளக்குறிச்சி வட்டாட்சியராக கோ.ரகோத்தமன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா் (படம்).
இதற்கு முன்பு இவா், திண்டிவனத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்து வந்தாா். கள்ளக்குறிச்சி வட்டாட்சியராகப் பணியாற்றி வந்த வெ.ராஜசேகா் திண்டிவனம் வட்டாட்சியராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
கள்ளக்குறிச்சி வட்டாட்சியராகப் பொறுப்பேற்ற கோ.ரகோத்தமனுக்கு தனி வட்டாட்சியா்கள், மண்டல வட்டாட்சியா்கள், உதவியாளா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.