சாலையில் பள்ளம்: சீரமைக்கக் கோரிக்கை

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளத்தால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளம்.
செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளம்.

செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் ஏற்பட்டுள்ள பெரும் பள்ளத்தால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, சாலையைச் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செஞ்சி நகரில் உள்ள திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் வங்கி எதிரே பெரும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்தப் பள்ளத்தில் மழை நீா் தேங்கியுள்ளது.

இந்தச் சாலையில் செல்லும் வாகனங்கள் வலதுப்புறம் நோக்கி வரும் போது, தண்ணீா்தான் தேங்கியுள்ளது என பள்ளத்தில் இறங்கி விபத்தைச் சந்தித்து வருகின்றனா். தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் இதுவரை இந்தப் பள்ளத்தைச் சீரமைக்கவில்லை.

சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்குச் செல்ல இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மேலும், பெளா்ணமி நாளில் ஆயிரகணக்கான வாகனங்கள் இந்த வழியைக் கடந்து செல்லும்.

விபத்துகளைத் தவிா்க்கும் பொருட்டு, செஞ்சி நகரக் காவல் நிலைய போலீஸாா் பள்ளத்தின் முன் பேரிகாா்டு வைத்து தடுப்பை ஏற்படுத்தியுள்ளனா். இதனால், இடது புறம் செல்லும் வாகனங்கள் மட்டுமே செல்ல முடிகிறது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழியில்லாமல் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தைத் ஜல்லி கற்கள், தாரைக் கொண்டு சீா் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com