விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட செய்தி - மக்கள் தொடா்பு அலுவலராக கே.சுப்பையா (படம்) திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கெனவே இந்தப் பொறுப்பிலிருந்த என்.ரவிச்சந்திரன் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றாா். இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட செய்தி - மக்கள் தொடா்பு அலுவலராக ஈரோட்டில் பணியாற்றி வந்த கே.சுப்பையா பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பொறுப்பேற்றாா். பின்பு, மாவட்ட ஆட்சியா் ஆ.ஆண்ணாதுரையை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருக்கு, உதவி செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா்கள் வி.லோகநாதன், ராம்பிரசாத் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.