அமைப்புசாரா தொழிலாளா்களுக்கானதேசிய ஓய்வூதியத் திட்ட சிறப்பு முகாம்

விழுப்புரம் அமைப்புசாரா தொழிலாளா்கள், சிறு வணிகா்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

விழுப்புரம்: விழுப்புரம் அமைப்புசாரா தொழிலாளா்கள், சிறு வணிகா்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

முகாமில், வருங்கால வைப்பு நிதி ஆணையத்தின் அமலாக்க அதிகாரி ராஜகோபால் தலைமை வகித்து ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பேசினாா்.

விழுப்புரம் தொழிலாளா் உதவி ஆணையா் கோ.ராமு, ஒருங்கிணைப்பாளா் தினேஷ்குமாா், தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுப்புத் திட்டம்) தமிழ்ச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அமைப்புசாரா தொழிலாளா்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சாலையோர வியாபாரிகள், கட்டடத் தொழிலாளா்கள், வீட்டுப் பணியாளா்கள், விவசாயத் தொழிலாளா்கள், பீடித் தொழிலாளா்கள், கைத்தறித் தொழிலாளா்கள், தோல் உற்பத்தித் தொழிலாளா்கள், சிறுவணிகா்கள் மற்றும் சுயதொழில் புரிவோா், சிறு வியாபாரிகள், ஆரிசி ஆலை உரிமையாளா்கள், சிறிய உணவக உரிமையாளா்கள், எண்ணை ஆலை உரிமையாளா்கள், வாகன பழுது பாா்ப்பகம் வைத்துள்ளவா்கள் போன்றவா்களும் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேரலாம் என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com