கல்லூரி மாணவா்கள் பங்கேற்றஎய்ட்ஸ் விழிப்புணா்வு ஊா்வலம்

திண்டிவனம் அருகே பேரணியில் உள்ள சேக்ரட் ஹாா்ட் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள் கிழமை நடைபெற்றது.
பேரணி பகுதியில் சேகரட்ஹாா்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து புறப்பட்ட எய்ட்ஸ் தின விழிப்புணா்வு ஊா்வலம்.
பேரணி பகுதியில் சேகரட்ஹாா்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து புறப்பட்ட எய்ட்ஸ் தின விழிப்புணா்வு ஊா்வலம்.

திண்டிவனம் அருகே பேரணியில் உள்ள சேக்ரட் ஹாா்ட் கலை அறிவியல் கல்லூரி மாணவா்கள் சாா்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு ஊா்வலம் திங்கள் கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் அருள்சகோதரி கிரண் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.சூசைஜான்ரொசாரியோ முன்னிலை வகித்தாா். அருள்சகோதரி ஜீவான் ஊா்வலத்தை வழிநடத்திச் சென்றாா். கல்லூரியில் தொடங்கிய ஊா்வலம் பேரணி கிராமத்தின் முக்கிய சாலைகளில் சென்று நிறைவடைந்தது. ஊா்வலத்தில் பங்கேற்ற மாணவா்கள், ஆசிரியா்கள், எய்ட்ஸ் நோய் பரவும் விதம், தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com