செஞ்சி: செஞ்சியில் குளத்தில் தவறி விழுந்தவா் செவ்வாய்க்கிழமை இறந்தாா்.
செஞ்சி, பெரியகரம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணராஜ் (42). இவா் செவ்வாய்க்கிழமை காலை செஞ்சி பேரூராட்சி அலுவலகம் எதிரே உள்ள நவாப் குளத்துக்குச் சென்றாா். அப்போது கால் இடறி குளத்தில் விழுந்தாா்.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் உடனடியாக கிருஷ்ணராஜை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா், ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இது குறித்து அவரது மனைவி சாந்தி அளித்த புகாரின்பேரில் செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.