விழுப்புரம்: விழுப்புரத்தை அடுத்த விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கிய இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
விக்கிரவாண்டி அருகே ரெட்டணை கிராமத்தைச் சோ்ந்தவா் முனுசாமி மகன் செல்வம்(25). பெயின்டா். இவா், தனது நண்பா்களுடன் அதே பகுதியில் உள்ள தொண்டி ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு குளிக்கச் சென்றாா். அப்போது, ஆற்றில் மூழ்கி செல்வம் மாயமானாா்.
இந்த நிலையில், அதே பகுதியில் ஆற்றின் கரையில் செல்வத்தின் சடலம் செவ்வாய்க்கிழமை காலை ஒதுங்கிக் கிடந்தது. சடலத்தை பெரியதச்சூா் போலீஸாா் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக, செல்வத்தின் மனைவி அனுசுதா பெரியதச்சூா் போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.