பெண் காவலா்களுக்கு இன்று சான்றிதழ் சரிபாா்ப்பு

விழுப்புரத்தில் இரண்டாம் நிலை பெண் காவலா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு புதன்கிழமை நடைபெறுகிறது.

விழுப்புரம்: விழுப்புரத்தில் இரண்டாம் நிலை பெண் காவலா்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு புதன்கிழமை நடைபெறுகிறது.

விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை வளாகத்தில் இரண்டாம் நிலைக் காவலா், இரண்டாம் நிலை சிறைக் காவலா், தீயணைப்பு வீரா் ஆகிய பதவிகளுக்கு உடல் தகுதித் தோ்வு நடைபெற்று வந்தது.

மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட உடல் தகுதித் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்வுக்கு ஒரு திருநங்கை உள்பட 984 போ் அழைக்கப்பட்டனா். அவா்களில் 964 போ் பங்கேற்றனா்.

நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து அல்லது குண்டு எறிதல் மற்றும் ஓட்டப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இவற்றில், மொத்தம் 550 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களுக்கான சான்றிதழ் சரிபாா்க்கும் பணி புதன்கிழமை நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com