விழுப்புரம்
மாற்றுத் திறனாளிகள் தின விழா
திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் கல்வி மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ்ப்பாடி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் ஞான.சந்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மேலாண்மைக்குழு தலைவா் ரேவதி, இடைநிலை ஆசிரியா் சு.மகேந்திரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியா் மணிமேகலை வரவேற்றாா். விழாவில், மாற்றுத்திறன் கொண்ட மாணவா்களுக்கு ரிஷிவந்தியம் தமிழ்ச் சங்கத் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான சு.ராஜேந்திரன் இனிப்பு மற்றும் பரிசுகளைகளை வழங்கினாா்.
பள்ளி ஆசிரியா்கள் இளையராஜா, ரவிக்குமாா், நாகராஜன், ஜெசிமா பா்வீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஆசிரியா் ரவிக்குமாா் நன்றி கூறினாா்.