விழுப்புரம் மேற்கு காவல் நிலையக் காவலரை ஆயுதப் படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. ஜெயக்குமாா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தவா் செந்தில். இவா், முறையாகப் பணிக்கு வராமல் இருந்ததுடன், மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டதாகவும் புகாா் எழுந்தது. இது குறித்து விசாரித்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், காவலா் செந்திலை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டாா்.