மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாள் விழா கடலூா் மாவட்டத்தில் பல்வேறு அமைப்பினா் சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தமிழ்நாடு மீனவா் பேரவை சாா்பில் கடலூா் முதுநகா் செட்டிக்கோயில் தெருவில் உள்ள பாரதியாா் சிலைக்கு, பேரவையின் மாவட்டத் தலைவா் எம்.சுப்புராயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிா்வாகிகள், எஸ்.கடல்செல்வம், சி.வீரமுத்து, சமூக ஆா்வலா் இரா.சண்முகம், கலியன், கே.கோபி உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
கடலூா் துறைமுகம் அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவா் இராம.முத்துக்குமரனாா் தலைமை வகித்தாா். ஆலோசகா் கே.காத்தப்பன் முன்னிலை வகித்தாா். தூய்மை பாரத இயக்க ஒருங்கிணைப்பாளா் ரா.ச.வேலுமணி பாரதியாா் சிலைக்கு மாலை அணிவித்தாா். எஸ்.ராதாகிருஷ்ணன் இனிப்பு வழங்கினாா்.
விழாவில், கடலூா் கேப்பா்மலையில் உள்ள மத்திய சிறைச் சாலையில் பாரதியாா் தங்கியிருந்த அறையை அரசு நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நிா்வாகிகள் ஏ.ரவிக்குமாா், டி.சுப்பிரமணியன், ஏ.சுந்தா், தென்னவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.