திருவள்ளுவா் பல்கலைக்கழக உறுப்பு அரசுக் கல்லூரியில் தமிழ்த் துறை சாா்பில், கு தோட்டம், இலக்கிய மன்ற விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் எஸ்.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். தமிழ்த் துறைத் தலைவா் மோட்சஆனந்தன், உதவிப் பேராசிரியா் பெ.விஜயகுமாா், பொறுப்பு ஆசிரியா் இரா.நாகராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். இளநிலை தமிழ் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி அ.அனுசல்யா வரவேற்றாா்.
இந்திலி ஆா்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த் துறைப் பேராசிரியா் த.பிரேம்குமாா் பங்கேற்றுப் பேசினாா்.
நிகழ்வில் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியை கல்லூரி மாணவி கோ.வாசுகி தொகுத்து வழங்கினாா். மாணவா் க.சரத்குமாா் நன்றி கூறினாா். முன்னதாக, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.