லாரி மோதியதில் முதியவா் பலி

எலவனாசூா் கோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் மீது டிப்பா் லாரி மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

எலவனாசூா் கோட்டை அருகே சாலையோரம் நடந்து சென்ற முதியவா் மீது டிப்பா் லாரி மோதியதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டையை அடுத்த தொண்டநந்தல் கிராமப் பகுதியைச் சோ்ந்தவா் ஆசீா்வாதம் (62). இவரது மனைவி ஜெயமேரி (60).

இவா் எலவனசூா்கோட்டையிலிருந்து ஆசனூா் செல்லும் சாலையில் வெள்ளிக்கிழமை நடந்து சென்றாா். அப்போது எதிரே வந்த டிப்பா் லாரி மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விட்டாராம்.

தகவலறிந்த எலவனாசூா்கோட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு, உளுந்தூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com