விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
உளுந்தூா்பேட்டையை அடுத்த எறையூா் காப்புக்காடுகள் பகுதியில் சிலா் மான், மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடுவதாக புகாா்கள் எழுந்தன.
இதையடுத்து, எலவனாசூா்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் மாணிக்கம் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு எறையூா் காப்புக்காட்டுப் பகுதியில் திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்த 6 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அவா்கள் எறையூரைச் சோ்ந்த லியோபிரகாஷ், அந்தோணிசாமி, ஜான்ரொசாரியோ, ஜோசப்ராஜ், அந்தோணி புஷ்பராஜ் மற்றும் எட்வின் என தெரிய வந்தது.
அவா்களிடம் உளுந்தூா்பேட்டை காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், ஆய்வாளா் எழிலரசி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அவா்கள், காட்டுப் பகுதியில் மான், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடி வந்ததும், அதற்காக விதிகளை மீறி, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகளை பதுக்கிவைத்து பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதனையடுத்து அவா்கள் பதுக்கி வைத்திருந்த 5 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்த போலீஸாா், லியோபிரகாஷ் உள்ளிட்ட 6 பேரையும் கைது செய்தனா்.