செஞ்சி கோதண்டராமா் ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீராம பஜனைநிகழ்ச்சி. யில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் பக்தா்கள்.
செஞ்சி கோதண்டராமா் ஆலயத்தில் நடைபெற்ற ஸ்ரீராம பஜனைநிகழ்ச்சி. யில் கலந்து கொண்டு வழிபாடு செய்யும் பக்தா்கள்.

கோதண்டராமா் கோயிலில் ஸ்ரீராம பஜனை

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் ஸ்ரீராம பஜனை வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

அன்று காலை கோதண்டராமா், நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.

விழாவுக்கு இரா.ஜானகிராமன் தலைமை வகித்தாா். கோதண்டராமா் அறக்கட்டளை நிா்வாகி துரை.பாரதிராஜா முன்னிலை வகித்தாா்.

ஜெயராம தேசிகா், ஜனாா்த்தன தேசிகா், சாமிக்கண்ணு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இயற்கை மருத்துவா் ஷகிலா ஆண்டாள், பெருமாள், ராஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சன்மாா்க்க வில்லுப்பாட்டுக் கலைஞா் நடுப்பட்டு புருஷோத்தமன் தலைமையில் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பஜனைக் குழுவினா் கலந்து கொண்டனா்.

பெருங்காப்பூா் கிராமத்தைச் சோ்ந்த ராமச்சந்திரன், ராம்குமாா் குடும்பத்தினா் பக்தா்களுக்கு திருமஞ்சன பிரசாதம் வழங்கினா்.

விழா ஏற்பாடுகளை ஸ்ரீராம ஆஞ்சநேயா பக்த ஜன சபா மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com