கட்டுமானத் தொழிலாளர்களுக்கு சிறப்பு முகாம்

திருக்கோவிலூரில் கட்டுமானம், உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.15) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

திருக்கோவிலூரில் கட்டுமானம், உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (பிப்.15) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் இதர நல வாரியங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழிலாளர்களை அதிகளவில் சேர்க்கும் வகையில்  சிறப்பு பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் திருக்கோவிலூரில் வெள்ளிக்கிழமை (பிப்.15) வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com