சிங்கவரம் அரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம்

செஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

செஞ்சி சிங்கவரம் ஸ்ரீஅரங்கநாத சுவாமி கோயிலில் ரத சப்தமி உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருமலையில் நிகழ்வது போன்று சிங்கவரம் கிராமத்திலும் அரங்கநாத பெருமாள் 7 வாகனங்களில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு சிறப்பு திருமஞ்சன ஆராதனையுடன் அரங்கநாதப் பெருமான் சூரியபிரபை வாகனத்திலும், காலை 8 மணிக்கு சேஷ வாகனத்திலும், காலை 10 மணிக்கு பெரிய திருவடி என்கிற கருடசேவை வாகனத்திலும், நண்பகல் 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், பிற்பகல் 1 மணிக்கு திருமஞ்சன விசேஷ அலங்காரத்திலும், பிற்பகல் 2 மணிக்கு சிறிய திருவடி என்கிற அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், மாலை 6 மணிக்கு சந்திரபிரபை வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு  ஸ்ரீஅரங்கநாத பெருமாள் அருள்பாலித்தார்.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com