பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சாவு

செஞ்சி சரகத்துக்கு உள்பட்ட வளத்தி காவல் நிலையத்தில் காவல்  ஆய்வாளராக பணி புரிந்து வந்த குமாரபாலன் (57) மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

செஞ்சி சரகத்துக்கு உள்பட்ட வளத்தி காவல் நிலையத்தில் காவல்  ஆய்வாளராக பணி புரிந்து வந்த குமாரபாலன் (57) மாரடைப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

வியாழக்கிழமை வழக்கம் போல பணியில் இருந்த குமாரபாலன் (57) (படம்) திடீரென மயங்கி விழுந்தார். உடன் இருந்த காவலர்கள் அவரை உடனடியாக செஞ்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, குமாரபாலனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். 

குமாரபாலனின் உடல் செஞ்சி அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவர், திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர். இவரது மனைவி பிரபா. இவர்களுக்கு ஸ்ரீநித்தியலட்சுமி, ஸ்ரீசத்தியஅபிராமி என்ற மகள்கள் உள்ளனர்.

தகவல் அறிந்த விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார்,  செஞ்சி எம்எல்ஏ செஞ்சிமஸ்தான் உள்ளிட்டோர் மருத்துவமனை சென்று குமாரகுருபாலன் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com