வட்டார வள குழுக் கூட்டம்

ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டுச் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வட்டார வள குழுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 

ரிஷிவந்தியம் அருகே பகண்டை கூட்டுச் சாலையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் வட்டார வள குழுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் கல்பனா தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேங்கடசுப்பிரமணியன், வட்டார மருத்துவ அலுவலர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கென்னடி, அண்ணாதுரை, போஷன் அபியான் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் ஜி.பிரசாந்த், உதவியாளர் மோகன்ராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.  மேலும், சமுதாய தொடர்புடைய நிகழ்வுகள் திட்டமிடப்பட்டன. குழந்தைகளின் வளர்ச்சிகளை கண்காணித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது. 
உணவுப் பாதுகாப்பு சுகாதார ஆய்வாளர்கள், சமுதாய சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com