விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் 4 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் மைக்கில் இருதயராஜ் மரக்காணம் காவல் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் கோட்டக்குப்பம் காவல் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த குமார் கடலூர் மாவட்டம் வேப்பூர் காவல் நிலையத்துக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த முருகேசன் கடலூர் கன்ட்ரோல் ரூமுக்கும் பணியிடமாற்றம் செய்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.