செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த காவலர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
செஞ்சியைச் சேர்ந்தவர் ஷாகுல்அமீது (30). இவர் செஞ்சி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட வளத்தி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவ பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டு அதிகாலை செஞ்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
கன்னலம் கிராமப் பகுதியில் வரும்போது அடையாளம் தெரியாத வாகனம் ஷாகுல் அமீது மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பலத்த காயமடைந்தார்.
தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஷாகுல்அமீது சனிக்கிழமை உயிரிழந்தார்.
இது குறித்து வளத்தி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.