கல்வராயன்மலை தரிசுக்காட்டில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் சார்பில் செயல்பட்டு வரும்
கேஜிபிவி பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, ஆமினா பெண்கள் நலவாழ்வு கல்வி அறக்கட்டளை கூடுதல் செயலர் மு.இதாயத்துல்லா தலைமை வகித்தார். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் மா.வினோதினி முன்னிலை வகித்தார்.
விழாவில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றிபெற்ற மலைவாழ் மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொங்கலிட்டு மாணவிகள், பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.