விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை போலீஸார் வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் பங்கேற்று, ஆயுதப்படை காவலர்கள், குடும்பத்தினர் இணைந்து பொங்கல் வைத்ததை தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, காவலர்கள், அலுவலர்கள், காவலர் குடும்பத்தினருக்கு கயிறு இழக்கும் போட்டிகள், இசை நாற்காலி, ஓட்டப் போட்டிகள் நடைபெற்றன. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முகிலன், காவல் துணை கண்காணிப்பாளர்கள் ஜெ.சங்கர், வெள்ளைச்சாமி, ஆய்வாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட அதிகாரிகள், காவலர்கள், பயிற்சி காவலர்கள், காவலர் குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.