தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் 8-ஆம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி, உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் எதிரில் அந்தக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கட்சிக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் ஞா.ராஜேஷ் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர்கள் உளுந்தூர்பேட்டை கோபி, திருநாவலூர் ஜெகதீஷ், மாவட்ட இளைஞரணி ஆஷித், மாவட்ட மாணவரணி கலைமணி, ஒன்றிய நிர்வாகி ஷம்மு உள்பட பலர் கலந்துகொண்டனர்.