வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா

திருக்கோவிலூர் - கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

திருக்கோவிலூர் - கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் மாட்டுப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னதாக, காலை 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாச்சனம், கலச ஸ்தாபனம், பஞ்சாசன பூஜை, பஞ்சவர்ண பூஜை மற்றும் காய்கனி, பலகாரங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, நந்திகேஸ்வரருக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நந்திகேஸ்வரர் மற்றும் ஆனந்தவல்லி சமேத சந்திரசேகரருக்கு சோடசோபஸார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், ஆலய வலமாக, கோபுர தரிசனத்துடன் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com