தென்னை மரத்திலிருந்து விழுந்த இளைஞர் சாவு
By DIN | Published On : 24th January 2019 09:35 AM | Last Updated : 24th January 2019 09:35 AM | அ+அ அ- |

கள்ளக்குறிச்சி அருகே தென்னை மரத்தில் இருந்து கீழே விழுந்த இளைஞர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
சங்கராபுரம் வட்டம், சித்தால் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மகன் ஜாகு (25). பட்டதாரி. இவர், அவரது நிலத்தில் உள்ள தென்னை மரத்தில் கடந்த 18.1.2019 அன்று தேங்காய் பறித்துக் கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்தாராம்.
இதில், பலத்த காயமடைந்த அவரை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.