முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு நிதியுதவி அளிப்பு
By DIN | Published On : 30th July 2019 10:09 AM | Last Updated : 30th July 2019 10:09 AM | அ+அ அ- |

கலை பண்பாட்டுத் துறை சார்பில், இசைக் கருவிகள், ஆடை ஆபரணங்கள் வாங்க 10 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் திங்கள்கிழமை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
இந்தக் கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியம், கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்டவை வழங்கக் கோரி, 520 மனுக்கள் வரப்பெற்றன. அந்த மனுக்களை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
கூட்டத்தில், கலை பண்பாட்டுத் துறை சார்பில், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் மூலம் இசைக் கருவிகள், ஆடை ஆபரணங்கள் வாங்க 10 நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.
கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் அம்புரோஸியாநேவீஸ்மேரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சந்திரசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கருணாநிதி, உதவி இயக்குநர்கள் (ஊராட்சிகள்) ஜோதி (விழுப்புரம்), ரெத்தினமாலா (கள்ளக்குறிச்சி), மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரகுபதி, முன்னோடி வங்கி மேலாளர் சேதுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.