காவல் உதவி ஆய்வாளர்ஆயுதப்படைக்கு மாற்றம்

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, கண்டமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக எழுந்த புகாரையடுத்து, கண்டமங்கலம் உதவி காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
 கண்டமங்கலம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த கோபாலகிருஷ்ணன், அந்த பகுதியில் மணல் கடத்தலுக்கும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், சட்டவிரோதமாக 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனைக்கும் உடந்தையாக செயல்பட்டதாக புகார் எழுந்தது.   இந்த புகார் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரித்தார். இதையடுத்து, கோபாலகிருஷ்ணனை விழுப்புரம் ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து அவர் புதன்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com